search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் படம்"

    பண்ருட்டி அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்(19). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் அதே பகுதியில் வீட்டில் குளிக்கும் பெண்களை மறைந்து நின்று தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அதை வைத்து கொண்டு பெண்களை மிரட்டினர். எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் செல்போனில் பிடித்த படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்-கில் வெளியிடுவோம் என கூறினர்.

    இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து பிரேம்குமார் மற்றும் மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    அவினாசி அருகே சாமி சிலையை செல்போனில் படம் பிடித்த பெண்ணை பக்தர்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் கோவில் நிர்வாகி கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மங்கலம் ரோட்டில் சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று வியாழக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து இருந்தனர்.

    அப்போது ஒரு இளம்பெண் அலங்கார தோற்றத்தில் இருந்த சாய்பாபா சிலையை தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த கோவில் நிர்வாகி அப்பெண் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அங்கிருந்த பக்தர்கள் கூறும் போது, அப்பெண் ஆர்வ கோளாறு காரணமாக சாமியை படம் பிடித்து இருக்கலாம். அவ்வாறு செய்வது தவறு என்று அப்பெண்ணை கண்டித்து இருக்கலாம்.

    அதை விட்டு கோவில் நிர்வாகியே பக்தர்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் அப்பெண்ணை கன்னத்தில் அறைந்து இருக்கக்கூடாது என்றனர்.

    இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×